"என்னடி சத்தத்தையே காணோம்...."
"........."
"ஏய் தடிமாடு.... ஏதாவுது பேசுடி...."
"நீங்களே பேசுங்க.. நான் கேட்டுட்டு இருக்கேன்....." குரலில் டன் டன்னாய் வெட்கம்...
"நான் ஏடாகூடமா எல்லாம் பேசுவேன்... நீ அதையெல்லாம் கேட்கமாட்டே...." நான் காவ்யாவை வம்புக்கு இழுத்தேன்...
"ஹூம்..... நீங்க என்ன பேசினாலும் நான் ஒரு வார்த்தை விடாம கேட்பேன்....நீங்க இப்படியெல்லாம் பேசமாட்டீங்களான்னு எத்தனை நாள் ஏங்கியிருக்கேன் தெரியுமா?....இப்போதுதான் சந்தோஷமாய் இருக்கு..."
"ஏண்டி.... இதெல்லாம் தப்பில்லையா?..." நான் தயக்கத்துடன் கேட்டேன்...
"ச்சு... சும்மாயிருக்கமாட்டீங்க.... தப்பா.. ரைட்டான்னு கேட்டுட்டு...." காவ்யா என்னை அதட்டினாள்...
"வேண்டாம்டி... இதெல்லாம் தப்பு...." நான் தயங்கினேன்...
"அதெல்லாம் ஒண்ணுமில்லே... நீங்க இந்த தப்பை சந்தோஷமாய் செய்யலாம்.... நான் ஒண்ணுமே சொல்லமாட்டேன்.."
"வெளிய தெரிஞ்சா?....."
"நானோ... இல்லை நீங்களோ வெளியே சொன்னால்தானே தெரியும்?... நான் கண்டிப்பாய் சொல்லமாட்டேன்... நீங்க சொல்லுவீங்களா?..."
"ம்... நான் சொன்னேன்னு வச்சுக்கோ... அப்போ என்ன பண்ணுவே?..."
"ம்?.. நான் ஒரே ஒரு காரியம்தான் பண்ணுவேன்... ஒரு முழ கயிறுலே தொங்கிடுவேன்...."
"டீ... கழுதை.... என்ன பேச்சுடி பேசறே?...." நான் சீறீனேன்...," நான் விளையாட்டுக்கு சொன்னேன்...."